மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் இன்று மின்தடை

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட கோட்டங்களில் இன்று மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.;

Update:2025-07-19 02:10 IST

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற கோட்டங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலைய பகுதிகளில் பின்வரும் நேரங்களில் மின்தடை செய்யப்படும்.

வள்ளியூர் மின் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வள்ளியூர், நவலடி, மற்றும் சங்கனான்குளம் துணை மின் நிலையங்களில் இன்று (19.7.2025, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன உபமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் இன்று கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை:

வள்ளியூர், செம்பாடு, கிழவனேரி, சமாதானபுரம், வடலிவிளை, தெற்கு வள்ளியூர், ஏர்வாடி, திருக்குறுங்குடி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:

நவலடி, ஆற்றங்கரை பள்ளிவாசல், தோட்ட விளை, தெற்கு புளிமான் குளம், கோடா விளை, மரக்காட்டு விளை, செம்பொன் விளை, காளி குமாரபுரம், குண்டல், பரதர் உவரி, பெட்டைகுளம், உறுமன்குளம்.

மன்னார்புரம், வடக்கு விஜய நாராயண், தெற்கு விஜய நாராயண், இட்டமொழி, நம்பி குறிச்சி, தெற்கு ஏராந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி ஆகிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:

கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

கல்லிடைக்குறிச்சி கோட்டம், மேலக்கல்லுர் துணைமின் நிலையத்தில் இன்று (19.7.2025, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும். அதன்படி மேலக்கல்லுர், சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுக்கல்லுர், பழவூர், கருங்காடு, திருப்பணிகரிசல்குளம், துலுக்கர்குளம், வெள்ளாளங்குளம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரந்தானேரி, ரஸ்தா, மூன்றடைப்பு, பரப்பாடி, மானுர் மற்றும் மூலைக்கரைப்பட்டி உபமின் நிலையங்களில் இன்று (19.7.2025, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதால் இன்று மேற்சொன்ன உபமின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:

அதன்படி மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானார்பட்டி, பிள்ளையார்குளம், குறிச்சிகுளம், சிங்கநேரி, அம்பலம், திடியூர், மூன்றடைப்பு, பானாங்குளம், மதவக்குறிச்சி, துலுக்கர்பட்டி, ரஸ்தா, பட்டவர்த்தி, வெங்கலப்பொட்டல், நரியூத்து, அம்பூரணி, தோட்டாக்குடி, பத்தினிப்பாறை, மருதகுளம், பரப்பாடி, இலங்குளம், சடையனேரி, சவனைக்காரன்குளம், வில்லயனேரி, ஏமன்குளம், பெருமாள்நகர், கேர்க்கனேரி, காரன்காடு, தட்டான்குளம், கண்ணநல்லூர், துலுக்கர்ப்பட்டி, பட்டர்புரம், மாவடி, முத்தலாபுரம், சித்தூர், சீயோன்மலை, கண்ணாத்திகுளம், தங்கயம், மூலைகரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைசெல்வி, காடான்குளம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை:

கங்கைகொண்டான் மற்றும் வன்னிக்கோனந்தல் உபமின் நிலையங்களில் இன்று (19.7.2025, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

அதன்படி சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூர், ராஜாபதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, அலவந்தான்குளம், செழியநல்லூர், வன்னிக்கோனேந்தல், மூவிருந்தாளி, தேவர்குளம், முத்தம்மாள்புரம், கண்ணாடிகுளம், மருக்காலங்குளம், தெற்குபனவடலி, நரிக்குடி ஆகிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை:

திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பாளையங்கோட்டை, சமாதானபுரம் துணைமின் நிலையங்களில் இன்று (19.7.2025, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.

அதன்படி வி.எம்.சத்திரம், கிருஷ்ணாபுரம், கட்டபொம்மன்நகர், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத்நகர், நீதிமன்றபகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கம் பகுதி, பாளை மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திம்மராஜபுரம், பொட்டல், படப்பக்குறிச்சி, திருமலைகொழுந்துபுரம், மணப்படைவீடு, கீழநத்தம், பாளை பேருந்து நிலையம், முருகன்குறிச்சி ஆகிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்