கோவில்பட்டியில் போக்சோ குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை

கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர், அத்துமீறி வீடுபுகுந்து 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்.;

Update:2025-07-30 07:04 IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு அத்துமீறி வீடுபுகுந்து 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கயத்தாறு தெற்கு கோனார்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் சண்முகையா (வயது 36) என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் "Cr.No.10/2019 u/s. 5(l), (j), (ii) r/w 6 of pocso Act and 450, 506(i) IPC" ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பீரித்தா நேற்று (29.7.2025) குற்றவாளி சண்முகையா என்பவருக்கு u/s. 5(l), (j), (ii) r/w 6 of pocso Actன் கீழ் 20 ஆண்டுகள் கடுங்கால் சிறை தண்டனை, ரூ.10,000 அபராதமும், 450 IPCன் கீழ் 2 ஆண்டுகள் மெய்க்காவல் சிறை தண்டனை, ரூ.2,000 அபராதமும் விதித்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மாவதி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு அமுதா ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்