மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை

தென்காசி கோட்டத்தில் உள்ள அச்சன்புதூர் உபமின் நிலையத்தில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.;

Update:2025-07-22 16:54 IST

திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட தென்காசி மாவட்டத்தில் உள்ள அச்சன்புதூர் உபமின் நிலையத்தில் நாளை (23.7.2025, புதன்கிழமை) மாதந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அச்சன்புதூர் உபமின் நிலையத்தில் நாளை (23.7.2025, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால், வடகரை, அச்சன்புதூர், நெடுவயல், வாவா நகரம், காசி தர்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்