சென்னையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை 6 வார்டுகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (23.7.2025) 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (23.7.2025) மாதவரம் மண்டலம், வார்டு-24ல் புனித அந்தோணி நகர், ஜி.என்.டி. சாலையில் உள்ள தியா திருமண மண்டபம், தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-41ல் மணலி சாலை, எச்.6, காவல் நிலையம் அருகில் உள்ள பாரத் பெட்ரோல் பேங்க் வாகன நிறுத்த இடம், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74ல் பெரம்பூர், மல்லிகாபுரம், கிருஷ்ணதாஸ் பிரதான சாலையில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-111, மாதிரி பள்ளிச் சாலையில் உள்ள சமூக நலக்கூடம், வளசரவாக்கம் மண்டலம், வார்டு-148ல் நெற்குன்றம், என்.டி. பட்டேல் சாலை, ஜி.எம். மஹால், சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-194ல் ஈஞ்சம்பாக்கம், கைலாஷ் கார்டன் ஆகிய 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.