வரலாற்று முக்கியத்துவத்தை உரக்க சொல்வோம் - மு.க.ஸ்டாலின்

சமூகநீதிக்கான இந்த அரசியலையும் - போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;

Update:2025-07-29 12:17 IST

சென்னை,

இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்ட (OBC) பிரிவினருக்கு மருத்துவ சேர்க்கையில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க சட்டப் போராட்டம் நடத்தி, நீதியை வென்ற நாள் இன்று (ஜூலை 29). இந்தநிலையில்,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில்,

20,088 இடங்கள் = பல குடும்பங்களின் பல தலைமுறைக் கனவு! சதிக்குக் கால் முளைத்துச் சாதியாகி உழைக்கும் மக்களை ஒடுக்கினாலும், விதி வலியது - இதுதான் நம் தலையில் எழுதியது எனச் சுருண்டுவிடாமல், போராடி பெறும் உரிமைகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் நமக்கான இடங்களை உறுதிசெய்கிறோம்!

சமூகநீதிக்கான இந்த அரசியலையும் - போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நம் விரல்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் வித்தையறிந்தவர்கள் செய்யும் சூழ்ச்சி அரசியலை முறியடிக்க, இந்நாளின் வரலாற்று முக்கியத்துவத்தை உரக்கச் சொல்வோம் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்