நெல்லையில் ஐ.டி. ஊழியர் கொலை; சுர்ஜித்தை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று சிபிசிஐடி விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த இளைஞர் கவின்குமார்;

Update:2025-08-12 19:30 IST

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த இளைஞர் கவின்குமார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இதனிடையே, கவின்குமார் கடந்த மாதம் 27ம் தேதி நெல்லை பாளையங்கோட்டையில் படுகொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தில் காதலியின் சகோதரன் சுர்ஜித் என்பவர் கவின்குமாரை வெட்டிக்கொன்றார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சுர்ஜித் போலீசில் சரணடைந்தார். கவின்குமார் காதலித்த இளம்பெண்ணின் பெற்றோரான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி சரவணன், கிருஷ்ணகுமாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில், இளம்பெண்ணின் தந்தை சரவணனையும் போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, கவின்குமார் கொலை வழக்கு கடந்த மாதம் 30ம் தேதி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணனை சிபிசிஐடி போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கவின் குமாரை கொலை செய்த சுர்ஜித்தை சிபிசிஐடி போலீசார் இன்று கொலை நடந்த இடத்திற்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கொலை நடந்த இடத்தில் வைத்து, கொலை நடந்தது எப்படி என்பது குறித்து சிபிசிஐடி போலீசாரிடம் சுர்ஜித் நடித்து காட்டினார். அதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்