சென்னை: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு

சென்னையில் வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பெண்கள் தங்களது நகைகளை பறிகொடுத்துள்ளனர்.;

Update:2025-08-04 08:43 IST

சென்னை,

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி ருக்மணி (வயது 62). இவர், சென்டிரலில் இருந்து மாநகர பஸ்சில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்மநபர்கள் ருக்மணி அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றுவிட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி கொடுங்கையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் வியாசர்பாடி ஜே.ஜே.ஆர்.நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சாந்தா (60). இவர், எருக்கஞ்சேரியில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விட்டு மாநகர பஸ்சில் வியாசர்பாடி வந்தார். அப்போது அவரது கைப்பையில் வைத்திருந்த 3½ பவுன் நகையை யாரோ திருடிச்சென்று விட்டனர். இதுபற்றி எம்.கே.பி.நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்