பட்டப்பகலில் வீடு புகுந்து, பெண்ணை தாக்கி கொள்ளை முயற்சி - திருப்பத்தூரில் பரபரப்பு

திருப்பத்தூரில் மர்ம நபர்கள் வீடுபுகுந்து பெண்ணை தாக்கி கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2025-08-01 21:16 IST

திருப்பத்தூரைச் சேர்ந்தவர் பஷீர். இவரது மனைவி ரேஷ்மா. இன்று மதியம் ரேஷ்மா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் ரேஷ்மாவை தாக்கிவிட்டு கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.

ரேஷ்மா கூச்சலிட்ட நிலையில் பக்கத்திலிருந்த இரும்பு ராடை எடுத்து ரேஷ்மாவின் தலையில் பலமாக தாக்கியுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்த நிலையில் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். ரேஷ்மா மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பலத்த காயமடைந்த ரேஷ்மா உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறார். சம்பவ இடத்தில் திருப்பத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்