பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் - தேர்தல் ஆணையம் அதிரடி

பீகார் மாநிலத்தில் உள்ள 7.9 கோடி வாக்காளர்களில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.;

Update:2025-07-25 17:38 IST

பாட்னா,

பீகாரில், இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அம்மாநிலத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. பீகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, இன்றுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில் பீகாரில் உள்ள 7.9 கோடி வாக்காளர்களில் 65 லட்சம் வாக்காளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இறப்பு, இடம் பெயர்ந்தவர்கள், மற்றும் இரு இடங்களில் பதிவு என மொத்தம் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1-ந்தேதி வெளியிடப்படும் என்றும், அதில் தகுதியுள்ள அனைவரும் சேர்க்கப்படுவார்கள் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நெருங்கும் நிலையில், 65 லட்சம் பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும், இது இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வாக்காளர்கள் நீக்கமாக பார்க்கப்படுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்