கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோவிலில் மலர் முழுக்கு விழா
பல வகையான மலர்களால் முருகப்பெருமானுக்கு மலர் முழுக்கு நடத்தப்பட்டது.;
கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் முருகன்குன்றத்தில் வேல்முருகன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடிமாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று ஆடி கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டுக்கான ஆடி கிருத்திகை விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் நிர்மால்ய தரிசனமும் அதைத் தொடர்ந்து கணபதி ஹோமமும் நடந்தது. பின்னர் அபிஷேகமும் சிறப்பு வழிபாடும் நடந்தது.
மாலையில் சாயராட்சை தீபாரதனையும் சிறப்பு வழிபாடும் நடந்தது. இரவு துளசி, பச்சை, சம்பங்கி, தாமரை, அரளி, செவ்வந்தி, ரோஸ், மல்லி, பிச்சி, கொழுந்து உள்ளிட்ட பல வகையான மலர்களால் வேல்முருகன் சுவாமிக்கு மலர் முழுக்கு நடத்தப்பட்டது.
பின்னர் அலங்கார தீபாராதனையும் விசேஷ பூஜையும் நடந்தது. இதில் திரளான புத்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.