பறக்கும் ரெயில் நிறுவனம் மெட்ரோவுடன் எப்போது இணைக்கப்படும்? நாடாளுமன்றத்தில் கனிமொழி கேள்வி

இந்த ஒருங்கிணைப்பின் மூலம் ரெயில் பயணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? என கனிமொழி தெரிவித்துள்ளார்;

Update:2025-07-30 23:13 IST

சென்னை,

பறக்கும் ரெயில் நிறுவனம் மெட்ரோவுடன் எப்போது இணைக்கப்படும்? என நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக கனிமொழி எம்.பி. பேசியதாவது,

சென்னை மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் எனப்படும் சென்னை பறக்கும் ரெயில் திட்டத்தின் செயல்பாடு மற்றும் நிர்வாகத்தை இந்திய ரெயில்வேயிடமிருந்து, சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட்க்கு மாற்றுவதற்கு அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?.

இந்த எம்.ஆர்.டி.எஸ். நெட்வொர்க்கை மெட்ரோ ரெயில்க்கு முழுமையாக மாற்றுவதற்கான எதிர்பார்க்கப்படும் காலக்கெடு என்ன? இந்த ஒருங்கிணைப்பின் மூலம் ரெயில் பயணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?. இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்