டிஎன்பிஎஸ்சி குரூப் 4: மறுதேர்வு நடத்தக்கோரி சென்னையில் தேர்வர்கள் போராட்டம்

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் முன்பு நேற்று போராட்டம் நடந்தது.;

Update:2025-08-14 10:20 IST

கோப்புப்படம்

சென்னை,

கிராம நிர்வாக அலுவலர், வனவர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட குரூப்-4 பதவி்களுக்கு கடந்த ஜூலை மாதம் 12-ந்தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

3,935 இடங்களுக்கு நடந்த இந்த தேர்வை 11,48,019 பேர் எழுதி இருக்கின்றனர். தேர்வில் கேட்கப்பட்டு இருந்த வினாக்கள், தேர்வுக்கான பாடத்திட்டத்தை தாண்டி கேட்கப்பட்டு இருந்ததாக தேர்வர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் குரூப்-4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து நிலை போட்டித் தேர்வர்கள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் முன்பு நேற்று போராட்டம் நடந்தது. போராட்டத்தில் குரூப்-4 தேர்வு எழுதியவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மேலும், மறுதேர்வு குறித்து ஆகஸ்டு 20-ந் தேதிக்குள் டி.என்.பி.எஸ்.சி. முடிவெடுத்து அறிவிக்காவிட்டால், இம்மாத இறுதியில் மதுரையில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்