டெல்டா விவசாயிகளின் துயரங்களை முதல்வர் ஒருமுறையாவது கண்டுகொள்ள வேண்டும் - நயினார் நாகேந்திரன்

உழவர் நலனைக் கைகழுவி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது தான் தி.மு.க-வினருக்கு நாடு போற்றும் நல்லாட்சி போலும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.;

Update:2025-08-04 12:55 IST

கோப்புப்படம்

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் சேமித்து வைத்திருந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையினால் சேதமாகியுள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது.

2024-25ஆம் ஆண்டு பட்ஜெட்டில் உணவு சேமிப்புக் கிடங்குகளுக்கான நிதி ஒதுக்கீட்டை கடந்த ஆண்டைக் காட்டிலும் 50 சதவீதம் குறைத்து விவசாயிகள் நலனை அலட்சியப்படுத்தியது திமுக அரசு. அத்தோடு நில்லாது, பயிர்களைத் தற்காலிக கொள்முதல் நிலையங்களில் எந்தவித பாதுகாப்புமின்றி மழையில் நனையவிட்டு வீணாக்கி உழவர்களின் உழைப்பை அவமதித்துள்ளது. இப்படி தொடர்ந்து உழவர் நலனைக் கைகழுவி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது தான் தி.மு.க-வினருக்கு நாடு போற்றும் நல்லாட்சி போலும்.

"நானும் டெல்டாக்காரன் தான்" என்று இனியொரு முறை பெருமிதம் கொள்ளும் முன், டெல்டா விவசாயிகளின் துயரங்களை ஒருமுறையாவது கண்டுகொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்