தாம்பரம்-விழுப்புரம் பயணிகள் ரெயில் ரத்து
பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.;
சென்னை,
சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள விக்கிரவாண்டி பணிமனையில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம்12.15 மணி முதல் 3.45 மணி வரையில் (3 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* தாம்பரத்தில் இருந்து நாளையும் நாளை மறுநாளும் காலை 9 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம் வரை செல்லும் பயணிகள் ரெயில் (வண்டி எண்: 66045) திண்டிவனம்- விழுப்புரம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
* விழுப்புரத்தில் இருந்து நாளையும் நாளை மறுநாளும் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை வரை செல்லும் பயணிகள் ரெயில் (66046) விழுப்புரம்-திண்டிவனம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.