சிவகங்கையில் தி.மு.க. நிர்வாகியை கொன்றவரின் தந்தை வெட்டிக்கொலை; பழிக்குப்பழியா? - போலீஸ் விசாரணை
கொலை செய்யப்பட்ட கருப்பையாவின் மகன் ஏற்கனவே தி.மு.க. நிர்வாகி பிரவீன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.;
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் சாமியார்பட்டியைச் சேர்ந்த கருப்பையா. ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்த கருப்பையாவை இன்று மர்ம நபர்கள் சிலர் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், கருப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முன்னதாக கருப்பையாவின் மகன் விக்கி என்ற கருணாகரன், தி.மு.க. நிர்வாகி பிரவீன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்துள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.