தூத்துக்குடியில் கணவருடன் தகராறு: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் கணவன் மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.;
தூத்துக்குடி, முத்தையாபுரம் சுந்தர்நகர் 1வது தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி பொன்இருடி (வயது 24). இந்த தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று கணவன் மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன வேதனை அடைந்த பொன்இருடி தனது வீட்டில் பாத்ரூமில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயந்தி சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.