சென்னை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் முதியவரை கைது செய்தனர்.;

Update:2025-08-17 06:32 IST

சென்னை,

சென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 67). இவர், 10 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி சிறுமியின் தாயார் புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சுப்பிரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்