பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் கிடுகிடுவென உயர்ந்த காய்கறி விலை
வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை 80 சதவீதம் உயர்ந்ததாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.;
ஐரோப்பிய மத்திய வங்கி, பருவநிலை தாக்க ஆராய்ச்சிக்கான போட்ஸ்டம் இன்ஸ்டிடியூட், இங்கிலாந்தின் உணவு அறக்கட்டளை ஆகியவை 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 18 நாடுகளில் பருவநிலை மாற்றத்தால் உணவுப்பொருட்கள் விலை உயர்ந்தது பற்றி ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதில், 2024-ம் ஆண்டு மிகவும் வெப்பமயமான ஆண்டாக இருந்ததாகவும், சர்வதேச சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயர்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதன் காரணமாக, இந்தியாவில் மே மாதம் வெப்பஅலை உருவாகி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை 80 சதவீதம் உயர்ந்ததாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.