சிற்றார் அணையினை மீன்பாசி குத்தகைக்கு பெற இணைய வழி ஏலம்: கன்னியாகுமரி கலெக்டர் அறிவிப்பு
சிற்றார் அணையினை மீன்பாசி குத்தகைக்கு பெற இணையவழி ஏலத்தில் ஒப்பந்தப்புள்ளியை ஆகஸ்ட் 7ம்தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, குளச்சல் (இ) தேங்காய்பட்டணம் அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிற்றார் நீர்த்தேக்கத்தில் 5 ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகைக்கு விடும் பொருட்டு இணைய வழி ஏல அறிவிப்பானது (e-tender) சென்னை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையரால் கடந்த 24.7.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
சிற்றார் நீர்த்தேக்கத்தின் மீன்பாசி ஏலம் தொடர்பான ஏல அறிவிப்பு, ஏல நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை www.tntenders.gov.in என்ற இணையதள முகவரியில் பார்வையிடலாம். மேலும் இந்த இணையவழி ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவர்கள் ஒப்பந்தப்புள்ளி படிவம் மற்றும் இதர படிவங்களை மேற்குறிப்பிடப்பட்ட இணையதளத்தில் 19494/F3/2024/13 என்ற ஏல அறிவிப்பு எண்ணினை உள்ளீடு செய்து கட்டணமின்றி இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையவழி ஏலத்தில் ஒப்பந்தப்புள்ளியை 7.8.2025 அன்று மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். மேலும் ஏலம் தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் inlandfisheries15@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியும், அல்லது கீழ்குளம், முக்கட்டுவிளையில் அமைந்துள்ள தேங்காய்பட்டணம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகியோ நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
எனவே கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் அமைந்துள்ள சிற்றார் அணையினை மீன்பாசி குத்தகைக்கு பெற விருப்பம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.