லஞ்சம் பெற்ற அறநிலையத்துறை உதவி ஆணையர் கைது
கோவை அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா, லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.;
கோவை,
தனியார் கோவில் வருவாய் பிரச்னை தொடர்பாக நடவடிக்கை எடுக்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டதாக கோவை அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாயை பெறும் போது, இந்திரா கையும் களவுமாக சிக்கினார். இதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து இந்திராவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.