குரூப்-1 தேர்வில் கட்-ஆப் மார்க் குறைந்ததால் விரக்தி: அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

குரூப்-1 தேர்வில் கட்-ஆப் மார்க் குறைந்ததால் விரக்தியில் அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2025-07-30 18:15 IST

கோப்புப்படம் 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர், ராஜேந்திரன். இவருடைய மகன் நடராஜன் (27 வயது). மாற்றுத்திறனாளியான இவர் ஏற்கனவே குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக திருப்புவனம் யூனியனில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் குரூப்-1 தேர்வு எழுதி வெற்றி பெற்று நேர்முக தேர்வு வரை சென்றுள்ளார். அங்கு அவருக்கு கட் ஆப் மார்க் எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை எனக்கூறி மனவருத்தத்தில் இருந்தார். நடராஜனின் தந்தை ராஜேந்திரன், வெளியூரில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடராஜனின் தாயார் நூறு நாள் வேலைக்கு சென்று உள்ளார். அப்போது, மின்விசிறியில் நடராஜன் தூக்கில் தொங்கி உள்ளார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது தந்தை ராஜேந்திரன் திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்