தாம்பரம்-ஜார்கண்ட் இடையிலான அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
தாம்பரம்-ஜார்கண்ட் இடையிலான அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒடிசா மாநிலம் சாம்பல்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தாம்பரத்தில் இருந்து அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி மதியம் 1 மணிக்கு புறப்பட்டு ஜார்கண்ட் மாநிலம் ஜசிதி செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12375) விஜயநகரம், குர்தா சாலை, நாரா மர்தாபூர், ஆங்குல், சாம்பல்பூர், ஜார்சுகுடா வழியாக இயக்கப்படும்.
அதேபோல, ஜசிதியில் இருந்து அடுத்த மாதம் 13-ந் தேதி புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12376) ஜார்சுகுடா, சாம்பல்பூர், ஆங்குல், நாரா மர்தாபூர், குர்தா சாலை, விஜயநகரம் வழியாக இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.