எடப்பாடி பழனிசாமியின் 23ஆம் தேதி சுற்றுப் பயணம் ஒத்திவைப்பு

எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 7-ம் தேதி முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.;

Update:2025-08-11 16:33 IST

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் சட்டசபை தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமியின் 23ஆம் தேதி சுற்றுப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக

அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் `மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள், 23.8.2025 வரை தொடர் பிரசாரம் செய்திடும் வகையில் அறிவிக்கப்பட்டிருந்த, புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயண மூன்றாம் கட்ட சுற்றுப் பயணத் திட்டத்தில், 23.8.2025 – சனிக் கிழமை அன்று சோழிங்கநல்லூர், திருப்போரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்