வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி
தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு குறைவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;
சென்னை,
தமிழ்நாட்டில் ஆங்காங்கே வெப்ப சலனத்தால் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அவ்வப்போது மழைக்கான சூழலும் உள்ளது. இந்தநிலையில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் எனவும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு குறைவு. இது வடக்கு ஆந்திரா, தெலுங்கானா வாயிலாக மராட்டியம் செல்கிறது. இந்த பகுதிகளில்தான் மழைக்கு வாய்ப்பு அதிகம். தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி கனமழைக்கு சற்று வாய்ப்பு இருக்கிறது. மழைக்கான வாய்ப்பு இல்லை என்றாலும், வருகிற 18-ந்தேதி வரை வெப்பத்தின் தாக்கம் குறைந்து இருக்கும். அதன் பிறகு மீண்டும் வெப்பநிலை சற்று அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.