சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;
சென்னை,
சென்னையில் 30.07.2025 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
பெசன்ட் நகர்: ருக்மணி சாலை, கடற்கரை சாலை, அருண்டேல் கடற்கரை சாலை, 7வது அவென்யூ, 30வது குறுக்குத் தெரு, எம்ஜிஆர் சாலை, டைகர் வரதாச்சாரி சாலை, முத்துலட்சுமி தெரு, லட்சுமிபுரம்.
சோழிங்கநல்லூர்: 200 அடி ரேடியல் சாலை, ராஜம் நகர், விடுதலை நகர், பெரிய கோவிலம்பாக்கம்.