ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;
மும்பை.
இந்திய பங்குச்சந்தை இன்று (15.07.2025 - செவ்வாய்க்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 113 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 25 ஆயிரத்து 195 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 241 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 57 ஆயிரத்து 6 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
126 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 26 ஆயிரத்து 928 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 317 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 82 ஆயிரத்து 570 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
173 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 342 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 178 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் எக்ஸ் 63 ஆயிரத்து 775 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.