ஆகஸ்ட் 14: பல லட்சம் அப்பாவி குழந்தைகளைக் கொன்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025

ஆகஸ்ட் 14: பல லட்சம் அப்பாவி குழந்தைகளைக் கொன்று முஸ்லிம் லீக் வன்முறையைக் கட்டவிழ்த்த நாள் - கவர்னர் ஆர்.என்.ரவி


தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இன்று 'ஆகஸ்ட் 14' பாரதம் தனது 5,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் ஒருபோதும் நடந்திராத சம்பவத்தை ஆழ்ந்த வேதனையுடன் நினைவுகூர்கிறது. பாரதத்தாயின் பல லட்சம் அப்பாவி குழந்தைகளைக் கொன்று. முஸ்லிம்களுக்கு ஒரு தனி நாடு என்ற அடிப்படையில் முஸ்லிம் லீக் அதன் வன்முறையைக் கட்டவிழ்த்தது. முஸ்லிம் லீக்கால் 'காஃபீர்கள்' என்று முத்திரை குத்தப்பட்டதால், பல்லாயிரம் ஆண்டுகளாக தங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த நிலத்திலிருந்து லட்சக்கணக்கானவர்கள் வேரறுக்கப்பட்டனர். பிரிவினையின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Update: 2025-08-14 05:32 GMT

Linked news