சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
மழை காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.;
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்நி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், சென்னை சென்டிரல், கிண்டி , மெரினா கடற்கரை, சேத்துப்பட்டு, அசோக் நகர், சாந்தோம், நங்கநல்லூர், மாம்பலம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.