வங்கக்கடலில் 24-ம் தேதி புயல் சின்னம் உருவாகிறது - வானிலை ஆய்வு மையம் தகவல்

புயல் சின்னம் படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update:2025-07-18 15:42 IST

சென்னை,

நாடு முழுவதும் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து, பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருகிற 22-ம் தேதி வரை கனமழை பெய்ய இருப்பதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வங்காள தேசம், மேற்கு வங்காள கடற்கரை பகுதியில் வருகிற 24-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த புயல் சின்னம் படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்