சோழர்களின் பெருமையை கேட்டறிந்த பிரதமர் மோடி
கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோவில் மாளிகையில் உள்ள சிலைகள், சிற்ப வேலைபாடுகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் பெருமைகளைக் கேட்டறிந்தார். அவர்கள் போர் புரிந்த இடங்கள், அவர்களின் எல்லை விரிவாக்கம் உள்ளிட்டவை குறித்துக் கேட்டறிந்தார். சோழர் கால செப்பேடுகள், உலோகத்தில் வடிக்கப்பட்ட சிலைகள், கற்களில் செதுக்கப்பட்ட சிலைகள் போன்றவற்றை பார்வையிட்டு அவை குறித்து அறிந்துகொண்டார்.தொடர்ந்து, கோவிலின் முக மண்டபம், மகா மண்டபம் உள்ளிட்டவற்றையும் பார்த்து வியந்தார்.
Update: 2025-07-27 08:14 GMT