சோழீசுவரருக்கு தீபாராதனை காட்டிய பிரதமர் மோடி ... ... கங்கைகொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்...!

சோழீசுவரருக்கு தீபாராதனை காட்டிய பிரதமர் மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழீசுவரர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். சோழீசுவரர், துர்கா, பார்வதி, முருகன் சன்னதிகளில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.

வாரணாசியில் இருந்து கங்கை நீரை கொண்டு வந்து சோழீசுவரருக்கு பிரதமர் மோடி அபிஷேகம் செய்தார். அதன்பின்னர், சோழீசுவரருக்கு பிரதமர் மோடி தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். சோழீசுவரர் கோவிலில் தமிழில் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் பூஜை நடத்தினர். முன்னதாக, பிரதமர் மோடிக்கு சோழிசுவரர் கோவில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.   

 

Update: 2025-07-27 08:14 GMT

Linked news