உத்தரபிரதேசத்தில் கல்குவாரியில் பாறைகள் சரிவு -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-11-2025
x
Daily Thanthi 2025-11-16 04:26:26.0
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் கல்குவாரியில் பாறைகள் சரிவு - 15 பேரின் நிலை என்ன? 


உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ராவில் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. குவாரி உள்ளேயும், பெரிய பள்ளம் தோண்டப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாறைகள் சரிந்து விழுந்தது. இதில் 16 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணி ஈடுபட்டனர்.

1 More update

Next Story