தூத்துக்குடியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.;
தூத்துக்குடி, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி சண்முகபுரம் கீழத் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் பிரசாத் (வயது 29) சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த 17ம்தேதி காலையில் இருந்து யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார். அன்று இரவு சாப்பிட்டுவிட்டு மாடியில் உள்ள அறைக்கு தூங்குவதற்கு சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து இரவு, அவரது அண்ணன் மனோஜ்குமார் மாடிக்கு சென்று பார்த்தபோது, பிரசாத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.