மருத்துவமனைக்குள் புகுந்து பெண் குத்திக் கொலை - கரூரில் பரபரப்பு
இன்று காலை மனைவியை பார்க்க விஷ்ரூத் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.;
கரூர் ,
கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் விஷ்ரூத். இவர் தணியார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவரது மனைவி ஸ்ருதிக்கும் நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் தாக்குதலுக்குள்ளாகி அப்பெண் குளித்தலை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று காலை மனைவியை பார்க்க விஷ்ரூத் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது விஷ்ரூத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது மனைவியை குத்திக்கொலை செய்தார். இதனை தொடர்ந்து அவர் அங்கிருந்து தப்பி சென்றார். இந்த சம்பவத்தை கண்ட மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இதனையடுத்து சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கொலை தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் தப்பி ஓடிய விஷ்ரூத்தினை தீவிரமாக தேடி வருகின்றனர்.