15 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.;
சென்னை,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தின் 15 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, திருப்பூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், நீலகிரி, திருப்பூர், கரூர், கன்னியாகுமரி மாவட்ட மலை பகுதிகள், நெல்லை, தென்காசி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.