ராகுல் காந்தியின் பேச்சு முதிர்ச்சியின்மையை காட்டுகிறது: பெ.சண்முகம் விமர்சனம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் மதசாா்பின்மையை பாதுகாக்க முடியுமா? என்று பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.;

Update:2025-07-20 22:01 IST

கேரள மாநில முன்னாள் முதல் மந்திரியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் கோட்டயம் புதுப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்பொது, ஆா்.எஸ்.எஸுக்கும், மாா்க்சிஸ்ட் கட்சிக்கும் மக்களை பற்றிய புரிந்துணா்வு இல்லை. அவா்களுக்கு நிறைய கொள்கைகள் இருக்கலாம். அவா்களால் நிறைய பேச முடியும். ஆனால்,அவா்களுக்கு மக்களுக்கள் மீது அன்பு இல்லை என்றுகூறினார்.

இது குறித்து மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- ,மதவாத சக்தியான பாஜக- ஆா்.எஸ்.எஸ்க்கு எதிராக மதசாா்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. முன்னாள் காங்கிரஸ் கட்சிதலைவா் ராகுல் காந்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், ஆா்.எஸ்.எஸ்யும் சித்தாந்த ரீதியாக சம அளவில் எதிா்த்து போராடுகிறேன் என்று பேசியிருப்பது. அவரது முதிா்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் மதசாா்பின்மையை பாதுகாக்க முடியுமா? என்றார்

Tags:    

மேலும் செய்திகள்