பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை
சென்னையில் நாளை மறுநாள் மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் நாளை மறுநாள் (22.7.2025, செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
நீலாங்கரை: பழைய கணேஷ் நகர் பிரதான சாலை 5 முதல் 11வது தெரு வரை, ஸ்ரீ கற்பக விநாயகர் நகர், மகாத்மா காந்தி நகர், ராமலிங்க நகர், கோபிநாத் அவென்யூ, நாராயண நகர், திருவள்ளுவர் நகர், பாரதி தெரு, காமராஜர் தெரு, செந்தாமரை கண்ணன் நகர், ராஜேந்திர நகர் 11வது தெரு, கிழக்கு கடற்கரை சாலை, வெட்டுவான்கேணி பிரதான சாலை.
அடையாறு: சாஸ்திரி நகர், எல்.பி. சாலை, கலாஷேத்ரா சாலை, ஆர்.கே.நகர், ஸ்ரீராம் நகர், சாந்தி அவென்யூ, சிவசுந்தர் அவென்யூ.
அம்பத்தூர்: மேனாம்பேடு, கல்லிக்குப்பம், பானு நகர், புதூர், சந்திரசேகரபுரம், ஒரகடம், கருக்கு, செங்குன்றம் சாலை.
பூவிருந்தவல்லி: பூவிருந்தவல்லி நகராட்சி, சென்னீர்குப்பம், கரையாஞ்சாவடி, துளசிதாஸ் நகர், சின்னமங்காடு, குமணஞ்சாவடி.
செம்பியம்: எம்எச் சாலை, காமராஜ் சாலை, மூலக்கடை, காந்தி நகர் 1 முதல் 5வது தெரு, ஜம்புலி தெரு ஆகிய இடங்களில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.