மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு

மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 119.64 அடியாக உயர்ந்துள்ளது.;

Update:2025-07-19 17:30 IST

மேட்டூர்,

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முந்தினம் காலையில் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 17,880 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 18,610 கனஅடியாக அதிகரித்தது.

இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 18,610 கன அடியில் இருந்து 28,784 கன அடியாக அதிகரித்துள்ளது. மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 119.64 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து மொத்தமாக 18,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் காவிரி டெல்டா பாசனத்திற்காக 18,000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் வழியாக 500 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது அணையின் நீர் இருப்பு 92.899 டிஎம்சியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்